நம் நாடு வேண்டுமானால் சுதந்திரம் பெற்றிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு மனிதரும் தன்னிடமுள்ள காமம், குரோதம், பயம் என்ற மூவரிடம் இருந்து சுதந்திரம் பெறவில்லை. இம்மும்மலங்கலில் இருந்து நம்மை காப்பாற்றி நமக்கு சுதந்திரம் பெற்றுதர வக்கீலாக வாதாட வருகிறது நமது இணையதளம்.
நமது உடல் அழுக்கானால் குளித்து சுத்தமடைகிறோம். ஆனால் நம் மன அழுக்கை சுத்தப்படுத்த என்ன முயற்சி செய்தோம் ? நம் மனதை சுத்தப்படுத்த என்ன முயற்சி செய்தோம் ?
|
- மனம் : எண்ணங்களின் திரட்சி
- புத்தி : நல்லது கெட்டதை பிரித்துப்பார்ப்பது
- சித்தம் : பழைய வாசனைகளின் பதிவு
- அகங்காரம் : உடற்பற்று
- தியானம் : இறை சிந்தனை, வெற்றிப்பயணம்
|
|
ஒரு பொருள் உள்ள பாத்திரத்தில் இன்னொரு பொருளை போட முடியாது. மனம் என்னும் பாத்திரத்தை காலி செய்து கடவுளிடம் கொடுத்து விடு. அருளை நிரப்பி வைக்க பகவான் அதைப்பயன்படுத்திக் கொள்வார். நீ அதிர்ஷ்டசாலியாகி விடுவாய். இரவும் பகலும் போல, இருளும் ஒளியும் போல, இன்பமும் துன்பமும் நம்மிடம் கலந்தே நிற்கின்றன. துன்பத்தை நீக்கி இன்பத்தைக்காண இந்து மதம் மக்களுக்கு கலங்கரை விளக்கமாக உயர்ந்து நின்று பிறவிக்கடலை கடந்து கரை ஏற வழிகாட்டுகிறது.
ஞானம் வெகுதூரமாக இருந்த போதிலும் அதைப் புரிந்து கொண்டால் அது வெகு சமீபம். எதிலும் பதட்டப்படாது பொறுமையாக ஆழ்ந்து சிந்தித்து எதையும் இறைவன் சாட்சியாக நின்று உணர்ந்து பார்த்து முடிவெடுக்க வேண்டும். இதற்காகவே நாம் அடிக்கடி ஆலயத்திற்கு செல்கிறோம். ஆலயம் என்பது நமது ஆன்மா ஒரு நிலைப்பட்டு நிற்கும் புனித இடமாகும். இதனால் நீங்கள் கோயிலை உங்கள் உள்ளத்தில் கொண்டு வந்து நிறுத்தி மானசீகமாக இடைவிடாது
|
|
- மந்திரம் சொல்லுதல்
- வலம் வருதல்
- அர்ச்சனை செய்தல்
- பாதபூசை செய்தல்
- பூப்போடுதல்
- தீபாராதானை காட்டுதல்
|
|
| போன்றவைகளைச் செய்து அடிக்கடி மனதில் வழிபடும்போது உங்கள் சக்தி பெருகும். எதிலும் தெளிவு கிடைக்கும் என்பதை தெள்ளத் தெளிவாக கூறவருகிறது நமது இணையதளம். |